Newsநிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சீனாவின் விண்கலம்

-

நிலவில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், நிலவின் தென்துருவத்தில் நேற்று (02) அதிகாலை தரையிறங்கியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள், நிலவில் தங்கள் விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை தொடர்கின்றன. அந்த வரிசையில், சீனாவின் சாங், விண்கலம் ஐந்து முறை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020ல் அனுப்பப்பட்ட சாங், – 5 விண்கலம், நிலவில் தரையிறங்கி மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்த முறை, நிலவின் தென்துருவத்தில் உள்ள கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வர, சாங், – 6 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

இது, சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

விண்கலத்தில் தரையிறங்கிய லேண்டர் கருவி, தென்துருவத்தின் மேற்பரப்பு மற்றும் பூமியின் அடிப்பகுதியில் இருந்து, 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் கற்கள் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு அந்த விண்கலம் வரும் 25ஆம் திகதி பூமிக்கு திரும்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 2030இல் நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

1,000 வேலை வெட்டுக்கு தயாராகும் NSW போக்குவரத்துத் துறை

ஒரு பெரிய நிறுவன மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக, NSW-க்கான போக்குவரத்துத் துறை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல்...