Newsமூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

மூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

-

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் ஞாயிற்றுக்கிழமை (09) பதவியேற்றுக் கொண்டார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸ{, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமது அபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும், விழாவில் இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் உட்பட 8,000இற்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் டில்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Gold Coast-ல் அதிகரித்துவரும் தற்கொலைகள்

Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த...

விக்டோரியாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி

விக்டோரியாவில் பள்ளிப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக $22.5 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதியிலிருந்து 46 பள்ளிகள் பயனடையும் என்று கல்வி அமைச்சர்...

இலவச மின்சாரம் வழங்கும் Solar Sharer எவ்வாறு செயல்படும்?

அரசு அறிவித்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. Solar Sharer என்று அழைக்கப்படும் இந்த...