Newsமூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

மூன்றாவது முறையாக பாரதப் பிரதமரானார் மோடி

-

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் ஞாயிற்றுக்கிழமை (09) பதவியேற்றுக் கொண்டார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸ{, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமது அபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும், விழாவில் இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் உட்பட 8,000இற்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் டில்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நன்றி தமிழன்

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...