Breaking Newsதுணை ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற விமானத்தை காணவில்லை!

துணை ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற விமானத்தை காணவில்லை!

-

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா பயணித்த விமானம் காணாமல் போயுள்ளது.

விமானத்தை தேடும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலாவியின் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம், அந்நாட்டின் தலைநகரான லிலோங்வேக்கு வடக்கே உள்ள மலைப் பகுதிக்கு ஒரு குறுகிய பயணத்தில் இருந்தபோது காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை 9.17 மணியளவில் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் 51 வயதான துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா பயணித்த விமானம் ரேடார் அமைப்பில் இருந்து காணாமல் போனது.

சுமார் 45 நிமிடங்கள் கழித்து Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ரேடாரில் இருந்து காணாமல் போன விமானத்தை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேராவின் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விசேட தேடுதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் பஹாமாஸிற்கான தனது திட்டமிட்ட அரச விஜயத்தை இரத்துச் செய்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...