Melbourneமெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

மெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

-

மெல்போர்னின் தென்கிழக்கே பிரபலமான சுற்றுலா கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக தன்னை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் ஒரு பெண் மற்றும் 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.15 மணியளவில் பிரைட்டன் கடற்கரையில் இந்த பெண் தனது இரண்டு மகள்களுடன் இருந்த போது இந்த ஆபாச செயலுக்கு முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் குறித்த பெண் மற்றும் சிறுமிகள் முன்னிலையில் இரண்டு தடவைகள் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு அருகில் உள்ள முட்புதரில் ஒளிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முட்புதரில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததாக விக்டோரியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹம்ப்டன் பூங்காவில் வசிக்கும் 51 வயதுடைய நபர், இதற்கு முன்னரும் இவ்வாறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் இன்று முராபின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...