Melbourneமெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

மெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

-

மெல்போர்னின் தென்கிழக்கே பிரபலமான சுற்றுலா கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக தன்னை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் ஒரு பெண் மற்றும் 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.15 மணியளவில் பிரைட்டன் கடற்கரையில் இந்த பெண் தனது இரண்டு மகள்களுடன் இருந்த போது இந்த ஆபாச செயலுக்கு முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் குறித்த பெண் மற்றும் சிறுமிகள் முன்னிலையில் இரண்டு தடவைகள் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு அருகில் உள்ள முட்புதரில் ஒளிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முட்புதரில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததாக விக்டோரியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹம்ப்டன் பூங்காவில் வசிக்கும் 51 வயதுடைய நபர், இதற்கு முன்னரும் இவ்வாறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் இன்று முராபின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...