Melbourneமெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

மெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

-

மெல்போர்னின் தென்கிழக்கே பிரபலமான சுற்றுலா கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக தன்னை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் ஒரு பெண் மற்றும் 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.15 மணியளவில் பிரைட்டன் கடற்கரையில் இந்த பெண் தனது இரண்டு மகள்களுடன் இருந்த போது இந்த ஆபாச செயலுக்கு முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் குறித்த பெண் மற்றும் சிறுமிகள் முன்னிலையில் இரண்டு தடவைகள் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு அருகில் உள்ள முட்புதரில் ஒளிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முட்புதரில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததாக விக்டோரியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹம்ப்டன் பூங்காவில் வசிக்கும் 51 வயதுடைய நபர், இதற்கு முன்னரும் இவ்வாறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் இன்று முராபின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...