Melbourneமெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

மெல்போர்ன் கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர்

-

மெல்போர்னின் தென்கிழக்கே பிரபலமான சுற்றுலா கடற்கரையில் பெண்களிடம் அநாகரீகமாக தன்னை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் ஒரு பெண் மற்றும் 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.15 மணியளவில் பிரைட்டன் கடற்கரையில் இந்த பெண் தனது இரண்டு மகள்களுடன் இருந்த போது இந்த ஆபாச செயலுக்கு முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் குறித்த பெண் மற்றும் சிறுமிகள் முன்னிலையில் இரண்டு தடவைகள் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு அருகில் உள்ள முட்புதரில் ஒளிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முட்புதரில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததாக விக்டோரியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹம்ப்டன் பூங்காவில் வசிக்கும் 51 வயதுடைய நபர், இதற்கு முன்னரும் இவ்வாறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர் இன்று முராபின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...