AdelaideShopping Mall-ஐ போர்க்களமாக மாற்றிய அடிலெய்டு இளைஞர்கள்

Shopping Mall-ஐ போர்க்களமாக மாற்றிய அடிலெய்டு இளைஞர்கள்

-

தெற்கு அடிலெய்டில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மரியன் ஷாப்பிங் சென்டரில் நடந்த மோதலில் தொடர்புடைய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், வணிக வளாகத்தை மூடி, மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இன்று காலை 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களை தாக்குதல், அவமதித்தல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் குழுவிற்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில், தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களைக் கொண்ட குழு வணிக வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சண்டையிட்டதாக வெளிப்படுத்தினார்.

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பொலிஸார் மேலும் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தற்செயலான தாக்குதல் அல்ல என்றும், மற்றுமொரு இளைஞர் குழுவை தாக்குவதற்காக மூன்று சிறுவர்கள் வர்த்தக நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெஸ்ட்பீல்டில் கடைகள் இன்று வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...