Newsதெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

-

தெற்கு அவுஸ்திரேலியாவில் இரண்டு இலகுரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த இரண்டு விபத்துகளும் இன்று காலை மற்றும் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடிலெய்டில் இருந்து வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் 22 வயதான விமானி உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்தபோது அவர் மட்டும் விமானத்தில் இருந்தார்.

இந்த விபத்து காலை 9.30 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும், தொலைதூர பகுதிக்கு வருவதற்கு நேரம் எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இன்று பிற்பகல் இலகுரக விமானம் ஒன்று ஈவ்லின் டவுன்ஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விமானத்தின் பைலட் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் நடுத்தர வயதுடையவர் என்றும் அவருக்கு காயங்கள் மோசமாக இருந்தபோதிலும் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Latest news

வீட்டு வாடகை விலைகள் அதிகரிப்பால் குறைந்துவரும் மலிவு விலை வீடுகள்

கடந்த 12 மாதங்களில், சில பகுதிகளில் வீட்டு வாடகை விலைகள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் பொதுவாக மலிவு விலை வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட...

நேற்றிரவு விக்டோரியா வானில் தென்பட்ட வெளிச்சம்

விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வானில் தென்பட்ட பெரிய வெளிச்சம் குறித்த ஆர்வம் அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சிறுகோளின் பாகம் என்று நம்பப்படும்...

மனிதர்களுக்கான பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக, விலங்குகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க ஃபின்லாந்து திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தொடர்புடைய தடுப்பூசியை வழங்கும் உலகின் முதல்...

மெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4...

மனிதர்களுக்கான பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக, விலங்குகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க ஃபின்லாந்து திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தொடர்புடைய தடுப்பூசியை வழங்கும் உலகின் முதல்...

மெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4...