News12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...

12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அறிக்கை

-

பிரபல பொப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜக்சன் இறக்கும்போது ரூ12,000 கோடி வரை கடன் நெருக்கடியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பொப் இசைக்கலைஞரான மைக்கேல் ஜக்சன் தன்னுடைய 50-வது வயதில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி உயிரிழந்தார். இதுவரை 13 கிராமி விருதுகள் பெற்றுள்ள மைக்கேல் ஜேக்சனின் பாடல்கள் உலகமெங்கிலும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், அவர் இறக்கும் போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக அவருடைய எஸ்டேட் நிர்வாகிகள் அது குறித்த விவரங்களை கடந்த ஜூன் 21 அன்று தாக்கல் செய்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட சொத்து விவரங்களில் மைக்கேல் ஜக்சனுக்கு இறக்கும்போது ரூ.12,000 கோடி வரை (இலங்கை மதிப்பில்) கடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்னர் ‘திஸ் இஸ் இட்’ எனப்படும் உலக நாடுகளில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல நாட்கள் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் மைக்கேல் ஜக்சன். அதற்காக பல புதிய பாடல்களையும் எழுதி வைத்திருந்தார். ஆனால், ஒருபுறம் அவருக்கும் நிதி நெருக்கடி பெரிய அளவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மைக்கேல் ஜக்சனின் ஆடம்பர வாழ்க்கை முறையால் அவரது கடன் அளவு ஆண்டுக்கு ரூ.750 கோடி வரை அதிகரித்தது என்றும், அவர் ஆபரணங்களுக்காக அதிகளவு செலவிட்டதாகவும், தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய நெருக்கடியில் சிக்கியதாகவும் கணக்காளர் வில்லியம் ஒக்கர்மேன் ஜக்சனின் இறப்பு விசாரணையின் போது தெரிவித்தார்.

1993-ம் ஆண்டு முதலே மைக்கேல் ஜக்சன் கடன் பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளார். கடந்த 2001 முதல் 2009ஆம் ஆண்டு வரை அவருக்கு ரூ.4200 கோடி கடன் இருந்ததாகவும், அதற்கான வட்டியும் அவருக்கு பெரிய சுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜக்சன் இறந்தபோதும் அவரது கடன் நெருக்கடிகள் குறையவில்லை. இறப்பதற்கு முன் அவர் பங்கேற்பதாக இருந்த இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டதால் விளம்பரதாரர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.1100 கோடி வரையிலான கடன் தோகை அவரது எஸ்டேட்டின் மேல் விழுந்துள்ளது.

கடன்களை அடைக்க ஜக்சனின் சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கும் என்பதில் குறைந்த அளவே நம்பிக்கை உள்ளதாக சமீபத்திய விசாரணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...