News12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...

12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அறிக்கை

-

பிரபல பொப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜக்சன் இறக்கும்போது ரூ12,000 கோடி வரை கடன் நெருக்கடியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பொப் இசைக்கலைஞரான மைக்கேல் ஜக்சன் தன்னுடைய 50-வது வயதில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி உயிரிழந்தார். இதுவரை 13 கிராமி விருதுகள் பெற்றுள்ள மைக்கேல் ஜேக்சனின் பாடல்கள் உலகமெங்கிலும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், அவர் இறக்கும் போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக அவருடைய எஸ்டேட் நிர்வாகிகள் அது குறித்த விவரங்களை கடந்த ஜூன் 21 அன்று தாக்கல் செய்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட சொத்து விவரங்களில் மைக்கேல் ஜக்சனுக்கு இறக்கும்போது ரூ.12,000 கோடி வரை (இலங்கை மதிப்பில்) கடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்னர் ‘திஸ் இஸ் இட்’ எனப்படும் உலக நாடுகளில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல நாட்கள் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் மைக்கேல் ஜக்சன். அதற்காக பல புதிய பாடல்களையும் எழுதி வைத்திருந்தார். ஆனால், ஒருபுறம் அவருக்கும் நிதி நெருக்கடி பெரிய அளவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மைக்கேல் ஜக்சனின் ஆடம்பர வாழ்க்கை முறையால் அவரது கடன் அளவு ஆண்டுக்கு ரூ.750 கோடி வரை அதிகரித்தது என்றும், அவர் ஆபரணங்களுக்காக அதிகளவு செலவிட்டதாகவும், தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய நெருக்கடியில் சிக்கியதாகவும் கணக்காளர் வில்லியம் ஒக்கர்மேன் ஜக்சனின் இறப்பு விசாரணையின் போது தெரிவித்தார்.

1993-ம் ஆண்டு முதலே மைக்கேல் ஜக்சன் கடன் பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளார். கடந்த 2001 முதல் 2009ஆம் ஆண்டு வரை அவருக்கு ரூ.4200 கோடி கடன் இருந்ததாகவும், அதற்கான வட்டியும் அவருக்கு பெரிய சுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜக்சன் இறந்தபோதும் அவரது கடன் நெருக்கடிகள் குறையவில்லை. இறப்பதற்கு முன் அவர் பங்கேற்பதாக இருந்த இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டதால் விளம்பரதாரர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.1100 கோடி வரையிலான கடன் தோகை அவரது எஸ்டேட்டின் மேல் விழுந்துள்ளது.

கடன்களை அடைக்க ஜக்சனின் சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கும் என்பதில் குறைந்த அளவே நம்பிக்கை உள்ளதாக சமீபத்திய விசாரணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...