News12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...

12,000 கோடி கடனாளியாக இறந்த மைக்கேல் ஜக்சன் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அறிக்கை

-

பிரபல பொப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜக்சன் இறக்கும்போது ரூ12,000 கோடி வரை கடன் நெருக்கடியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பொப் இசைக்கலைஞரான மைக்கேல் ஜக்சன் தன்னுடைய 50-வது வயதில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி உயிரிழந்தார். இதுவரை 13 கிராமி விருதுகள் பெற்றுள்ள மைக்கேல் ஜேக்சனின் பாடல்கள் உலகமெங்கிலும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், அவர் இறக்கும் போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக அவருடைய எஸ்டேட் நிர்வாகிகள் அது குறித்த விவரங்களை கடந்த ஜூன் 21 அன்று தாக்கல் செய்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட சொத்து விவரங்களில் மைக்கேல் ஜக்சனுக்கு இறக்கும்போது ரூ.12,000 கோடி வரை (இலங்கை மதிப்பில்) கடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்னர் ‘திஸ் இஸ் இட்’ எனப்படும் உலக நாடுகளில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல நாட்கள் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் மைக்கேல் ஜக்சன். அதற்காக பல புதிய பாடல்களையும் எழுதி வைத்திருந்தார். ஆனால், ஒருபுறம் அவருக்கும் நிதி நெருக்கடி பெரிய அளவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மைக்கேல் ஜக்சனின் ஆடம்பர வாழ்க்கை முறையால் அவரது கடன் அளவு ஆண்டுக்கு ரூ.750 கோடி வரை அதிகரித்தது என்றும், அவர் ஆபரணங்களுக்காக அதிகளவு செலவிட்டதாகவும், தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய நெருக்கடியில் சிக்கியதாகவும் கணக்காளர் வில்லியம் ஒக்கர்மேன் ஜக்சனின் இறப்பு விசாரணையின் போது தெரிவித்தார்.

1993-ம் ஆண்டு முதலே மைக்கேல் ஜக்சன் கடன் பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளார். கடந்த 2001 முதல் 2009ஆம் ஆண்டு வரை அவருக்கு ரூ.4200 கோடி கடன் இருந்ததாகவும், அதற்கான வட்டியும் அவருக்கு பெரிய சுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜக்சன் இறந்தபோதும் அவரது கடன் நெருக்கடிகள் குறையவில்லை. இறப்பதற்கு முன் அவர் பங்கேற்பதாக இருந்த இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டதால் விளம்பரதாரர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.1100 கோடி வரையிலான கடன் தோகை அவரது எஸ்டேட்டின் மேல் விழுந்துள்ளது.

கடன்களை அடைக்க ஜக்சனின் சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கும் என்பதில் குறைந்த அளவே நம்பிக்கை உள்ளதாக சமீபத்திய விசாரணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ்

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ் குறித்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Willows மற்றும் Kirwan பகுதிகளில் உள்ள செல்ல நாய்களிடையே Canine parvovirus (Parvo)...

ஓய்வூதிய வயது சுகாதார சேவைகளை முடக்கும் என கூறும் ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதை தாமதப்படுத்துவது நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், 10 பேரில்...

குயின்ஸ்லாந்தில் Pill Testing தடை செய்யப்பட்டதற்கான காரணம்!

Pill Testing-ஐ தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலமாக குயின்ஸ்லாந்து மாறியுள்ளது. அரசாங்கம் தொடர்புடைய திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும் பிரதிநிதிகள் சபை அதைத் தடை செய்ய...

அதிகரித்துள்ள விக்டோரியன் பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள்

விக்டோரியாவில் கல்வியில் செய்யப்பட்ட முதலீடுகள் மாணவர்களின் கற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விக்டோரியன் துணைப் பிரதமர் பென் கரோல், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்புக் கூட்டத்தில்,...

மெல்பேர்ணில் வேகமாக வாகனம் ஓட்டிய நபர் – வாகனம் பறிமுதல்

மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் மணிக்கு 196 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணியளவில்...

புற்றுநோயைத் தடுக்க உதவும் மருத்துவப் பரிசோதனை

பெரிய அளவிலான CT, ultrasound அல்லது MRI மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கு ஆளாவது குழந்தைகளில் புற்றுநோய் அபாயத்தை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அரசு...