Melbourneமெல்போர்னில் இந்த வாரம் மிகவும் குளிரான இரவாக இருக்கும் என எச்சரிக்கை

மெல்போர்னில் இந்த வாரம் மிகவும் குளிரான இரவாக இருக்கும் என எச்சரிக்கை

-

2024 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த மிகக் குளிரான இரவை இந்த வாரம் காணும் என்று மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாளை (03) விக்டோரியா மற்றும் தஸ்மேனியாவில் இரவு மிகவும் குளிராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றும், பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதும் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் அவ்வப்போது 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, சிட்னி வாசிகள் இந்த வாரம் முழுவதும் குளிரான காலநிலையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், கனமழை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01) காலை சிட்னி நகரில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 6.4 டிகிரி செல்சியஸை எட்டியது.

மெல்போர்னில் வெப்பநிலை முறையே 4 டிகிரி செல்சியஸ், 2 டிகிரி செல்சியஸ் மற்றும் 3 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச மதிப்புகளில் இன்றும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

மத்திய அரசின் சமூக ஊடகத் தடையில் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள்

பதின்ம வயதினருக்கான மத்திய அரசின் முன்மொழியப்பட்ட சமூக ஊடகத் தடையானது ஏற்கனவே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பதின்வயதினர் தங்கள் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் என்று பிரதமர்...

லெபனானில் இருந்து ஆஸ்திரேலியர்களை அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பம்

லெபனானில் நிலவும் மோதல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுமார் 500 ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்று வெளியேற்றப்படுகின்றனர். இரண்டு பட்டய விமானங்கள் பெய்ரூட்டில்...

24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

கர்நாடகாவில் பழைய என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார்...

24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

கர்நாடகாவில் பழைய என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார்...

வார விடுமுறையுடன் சில விமானங்களில் சிறப்பு தள்ளுபடி

விமான நிறுவனமான குவாண்டாஸ் வார விடுமுறையுடன் பல விமானங்களின் விலையில் சிறப்புக் குறைப்பைச் செய்துள்ளது. அதன்படி, உள்நாட்டு விமானங்களில் ஒரு பயணத்திற்கு குறைந்தபட்சம் 109 டாலர் அளவுக்கு...