Sydneyசிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

-

சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் வெஸ்டர்ன் அவென்யூவில் கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்றன.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிரின்ஸ் அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உதவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞனும் சந்தேகநபரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரா அல்லது அவரது அடையாளம் குறித்த தகவல்களை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...