Sydneyசிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

-

சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் வெஸ்டர்ன் அவென்யூவில் கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்றன.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிரின்ஸ் அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உதவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞனும் சந்தேகநபரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரா அல்லது அவரது அடையாளம் குறித்த தகவல்களை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

Latest news

No Fly List-இல் மேலும் 36 நாடுகளை சேர்த்துள்ள டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உள் ஆவணம், "பறக்க தடை பட்டியலில்" (No Fly List) 36 நாடுகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. விமானப் பயணம் தடைசெய்யப்பட்ட...

ஆண்களை விட அதிக அளவில் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்ளும் ஆஸ்திரேலிய பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பெண் உடற்கட்டமைப்பாளர்களால் ஸ்டீராய்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண் உடற்கட்டமைப்பாளர்களால் தசையை வளர்க்க உடற்கட்டமைப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை இப்போது பெண்கள் மத்தியிலும்...

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது.  அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை...