Cinemaபடப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

படப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

-

நடிகை ஷாலினி வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித்-ஷாலினி. ”அமர்க்களம்” திரைப்படத்தில் நடித்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குள் வராமல் குடும்பத்தைக் கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

நடிகர் அஜித் திடீரென சென்னைக்கு ஏன் சென்றார் எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஷாலினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்தியசாலையில் அஜித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ஷாலினிக்கு சென்னை வைத்தியசாலையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக பெண் கைது

தன்னுடன் பணிபுரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண் சிறுவனுடன் பாலியல்...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி

தெற்கு ஆஸ்திரேலியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய-வடக்கு பிராந்தியத்தில் உள்ள Fischer-iல் உள்ள ஒரு பண்ணையை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு கூடுதலாக 2 மில்லியன்...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக பெண் கைது

தன்னுடன் பணிபுரிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமானது என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண் சிறுவனுடன் பாலியல்...