Cinemaபடப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

படப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

-

நடிகை ஷாலினி வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித்-ஷாலினி. ”அமர்க்களம்” திரைப்படத்தில் நடித்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குள் வராமல் குடும்பத்தைக் கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

நடிகர் அஜித் திடீரென சென்னைக்கு ஏன் சென்றார் எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஷாலினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்தியசாலையில் அஜித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ஷாலினிக்கு சென்னை வைத்தியசாலையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...