Perthபூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

பூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

-

பெர்த்தில் உள்ள ஒரு கவுன்சில் பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது மற்றும் பிரிஸ்பேனில் நாய்களை உணவகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.

தெற்கு பெர்த் நகர சபையானது, அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் காரணமாக பல பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

MacDougall Park, Manning Bushland, Millers Pool, Sir James Mitchell Park, Curtin Primary Schools மற்றும் Collier Park Golf Course உட்பட 27 பகுதிகளில் இருந்து பூனைகளை தடை செய்ய புதிய மசோதா முன்மொழிகிறது.

குறித்த பகுதிகள் வன விலங்குகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பூனைகள் புதிய விதிகளின் கீழ் பிடிக்கப்பட்டு அகற்றப்படும் எனவும் சபை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், தவறு செய்யும் பூனை உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு $500 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தப் புதிய சட்டங்களும் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரிஸ்பேனில் உள்ள ஒரு உணவகத்திற்குள் செல்ல நாய்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளூர் செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகம், இது தொடர்பான குறிப்பொன்றை தமது ஸ்தாபனத்தின் முன் கதவில் வைத்து செல்ல நாய் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

9 வருடங்களுக்கு மேலாக நாய் உரிமையாளர்கள் தங்கள் உணவகத்திற்குள் விலங்குகளை அழைத்து வர அனுமதித்துள்ள போதிலும், ஊழியர் ஒருவர் நாயைத் தொட்டு கைகளை கழுவாதது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நிறுவனம் தொடர்பாக சபை அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வருந்தத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...

வெற்றியளித்துள்ள Work from home – அறிக்கையில் வெளியான தகவல்

முழுநேரமாக அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணையத்தின் புதிய அறிக்கை, தொலைதூர வேலை ஆஸ்திரேலியாவின்...

மளிகைப் பொருட்கள் செலவை குறைக்க AI-ஐப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான Brooke Ferrier, தனது குடும்பத்தின் வாராந்திர உணவைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். இது பொருட்களை வாங்கும் செலவை பாதிக்கு...

விக்டோரியாவில் 4 ஆண்களைக் கத்தியால் குத்திய 24 வயது பெண் கைது

விக்டோரியா பிராந்தியத்தில் நான்கு ஆண்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒரு இளம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 24 வயதான அந்த நபர், மெல்பேர்ணுக்கு கிழக்கே உள்ள...

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு...