Perthபூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

பூனைகள் மற்றும் நாய்களுக்கு தடை விதித்துள்ள பெர்த் கவுன்சில்

-

பெர்த்தில் உள்ள ஒரு கவுன்சில் பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது மற்றும் பிரிஸ்பேனில் நாய்களை உணவகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.

தெற்கு பெர்த் நகர சபையானது, அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் காரணமாக பல பொது இடங்களில் பூனைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

MacDougall Park, Manning Bushland, Millers Pool, Sir James Mitchell Park, Curtin Primary Schools மற்றும் Collier Park Golf Course உட்பட 27 பகுதிகளில் இருந்து பூனைகளை தடை செய்ய புதிய மசோதா முன்மொழிகிறது.

குறித்த பகுதிகள் வன விலங்குகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பூனைகள் புதிய விதிகளின் கீழ் பிடிக்கப்பட்டு அகற்றப்படும் எனவும் சபை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின் கீழ், தவறு செய்யும் பூனை உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு $500 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தப் புதிய சட்டங்களும் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரிஸ்பேனில் உள்ள ஒரு உணவகத்திற்குள் செல்ல நாய்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளூர் செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகம், இது தொடர்பான குறிப்பொன்றை தமது ஸ்தாபனத்தின் முன் கதவில் வைத்து செல்ல நாய் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

9 வருடங்களுக்கு மேலாக நாய் உரிமையாளர்கள் தங்கள் உணவகத்திற்குள் விலங்குகளை அழைத்து வர அனுமதித்துள்ள போதிலும், ஊழியர் ஒருவர் நாயைத் தொட்டு கைகளை கழுவாதது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நிறுவனம் தொடர்பாக சபை அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வருந்தத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

விக்டோரியா மாகாணத்தில் உள்ள டப்புட் என்ற இடத்தில், வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது வாகனத்தில் இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...

தவறான பழக்கவழக்கங்களால் வேலை இழக்கும் ஆஸ்திரேலிய இளைஞர்கள்

வெவ்வேறு நடத்தை முறைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக, இளம் தலைமுறையினர் பலர் பல்வேறு நிறுவனங்களால் வேலையில் இருந்து நீக்கப்படும் போக்கு உள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களின்...

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு மெல்பேர்ணிடமிருந்து ஒரு நற்செய்தி

மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய் சிகிச்சை முறையை அணுகும் வாய்ப்பையும் ஆஸ்திரேலியர்கள் பெற்றுள்ளனர். மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...