Newsபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்

-

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு இலங்கை வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, அவர் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போ தொகுதியின் முதல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிரிட்டனில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டு 19145 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உமா குமரன், தான் கிழக்கு லண்டனில் பிறந்ததாகவும், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தனது பெற்றோர் இங்கிலாந்துக்கு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

உண்மையான புகலிடக் கோரிக்கையைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் ஆபத்தில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உமா குமரன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தவர் மற்றும் பிரிட்டனில் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றியுள்ளார்.

லண்டன் மேயர் சாதிக் கானுக்காக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அவர், காலநிலை மாற்ற அமைப்பில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

உமா குமரன், தொழிலாளர் உரிமைகள் பற்றிய எண்ணம் தனது குடும்பத்தில் இருந்து வந்தது என்றும், யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களில் தனது தாத்தாவும் ஒருவர் என்றும் கூறியுள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் லண்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் சிதறிக் கிடப்பதாகவும், யுத்த மோதல்களினால் குடும்பம் இவ்வாறு சிதறிக் கிடப்பது வருத்தமளிப்பதாகவும் கூறுகிறார்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...