Newsகாஸா பாடசாலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் - குழந்தைகள்...

காஸா பாடசாலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் – குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

-

மத்திய காஸாவின் நுசீரத்தில் அமைந்துள்ள அல்-ஜாவ்னி பாடசாலை மீது நேற்று சனிக்கிழமை இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டதோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள், ஐ.நா. அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த பாடசாலையில் தங்கியிருந்த நிலையில், மேட்படி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த கொடூர தாக்குதல்களில் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் குழந்தைகள் உடல் சிதறி பலியாகிக் கிடந்த காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் படையினர் மேற்கண்ட நிவாரண முகாம் அமைந்துள்ள இந்த பகுதியில் பதுங்கியிருந்து, இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வந்ததாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

விக்டோரியா மாகாணத்தில் உள்ள டப்புட் என்ற இடத்தில், வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது வாகனத்தில் இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...

தவறான பழக்கவழக்கங்களால் வேலை இழக்கும் ஆஸ்திரேலிய இளைஞர்கள்

வெவ்வேறு நடத்தை முறைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக, இளம் தலைமுறையினர் பலர் பல்வேறு நிறுவனங்களால் வேலையில் இருந்து நீக்கப்படும் போக்கு உள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களின்...

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு மெல்பேர்ணிடமிருந்து ஒரு நற்செய்தி

மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய் சிகிச்சை முறையை அணுகும் வாய்ப்பையும் ஆஸ்திரேலியர்கள் பெற்றுள்ளனர். மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...