Newsவிக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

-

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம் 1.25 மணியளவில் ரெனி என்ற 42 வயதுடைய பெண் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

செல்லும்போது கறுப்பு பூனையை உடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஜூன் 2 ஆம் தேதி காலை 6 மணியளவில், லூகாஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டி, பூனையை அந்த வீட்டிற்கு வெளியே விட்டுச் சென்ற பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலும், குறித்த வீட்டிலிருந்து அவள் அப்போது உடைகள் மற்றும் தண்ணீரையும் கேட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய பெண் நீண்ட நாட்களாக காணாமல் போனதால் அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காணாமல் போனமை தொடர்பில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், குறித்த பெண் வேண்டுமென்றே மக்களைத் தவிர்க்க முயற்சிப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தப் பணப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...