Newsவிக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

-

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம் 1.25 மணியளவில் ரெனி என்ற 42 வயதுடைய பெண் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

செல்லும்போது கறுப்பு பூனையை உடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஜூன் 2 ஆம் தேதி காலை 6 மணியளவில், லூகாஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டி, பூனையை அந்த வீட்டிற்கு வெளியே விட்டுச் சென்ற பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலும், குறித்த வீட்டிலிருந்து அவள் அப்போது உடைகள் மற்றும் தண்ணீரையும் கேட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய பெண் நீண்ட நாட்களாக காணாமல் போனதால் அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காணாமல் போனமை தொடர்பில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், குறித்த பெண் வேண்டுமென்றே மக்களைத் தவிர்க்க முயற்சிப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தப் பணப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...