Melbourneமெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

மெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

-

மெல்போர்ன் இரசாயன ஆலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளுக்கு காற்று மற்றும் நீர் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து வெளியேறும் புகையால் நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அப்பகுதியில் தண்ணீரை பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு காரணம், தீயை அணைக்க அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனங்கள் கலந்த நீர் பொதுவான நீர்வழிப்பாதைகளில் புகுந்ததுதான்.

எனினும், அந்த நீர் குடிநீர் வாய்க்கால் அல்ல என்பதால், வீடுகளுக்கு வரும் தண்ணீரை குடிப்பதால் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆலைக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் ஏற்படும் பாதிப்புகளை முறையாக கண்டறியும் வரை அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை அணுக வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை காலை 11.20 மணியளவில் ஏற்பட்ட தீ 180 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான ரசாயனங்கள் இருந்ததாக விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...