Melbourneமெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

மெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

-

மெல்போர்ன் இரசாயன ஆலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளுக்கு காற்று மற்றும் நீர் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து வெளியேறும் புகையால் நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அப்பகுதியில் தண்ணீரை பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு காரணம், தீயை அணைக்க அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனங்கள் கலந்த நீர் பொதுவான நீர்வழிப்பாதைகளில் புகுந்ததுதான்.

எனினும், அந்த நீர் குடிநீர் வாய்க்கால் அல்ல என்பதால், வீடுகளுக்கு வரும் தண்ணீரை குடிப்பதால் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆலைக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் ஏற்படும் பாதிப்புகளை முறையாக கண்டறியும் வரை அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை அணுக வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை காலை 11.20 மணியளவில் ஏற்பட்ட தீ 180 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான ரசாயனங்கள் இருந்ததாக விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...