Melbourneமெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

மெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

-

மெல்போர்னில் உள்ள பிரபல ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தை பெயிண்ட் அடித்து சிதைத்த நபர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதனை சீரமைத்து சுத்தம் செய்ய கணிசமான தொகை செலவிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில் நிலையம் அருகே உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை புதன்கிழமை இரவு சிலர் வண்ணப்பூச்சு பூசி சிதைத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக மெட்ரோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மெல்போர்ன் நகரின் பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் மணிக்கூண்டு கோபுரத்தை மேலும் சேதமடையாத வகையில் பாதுகாப்பாகச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...