Melbourneமெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

மெல்போர்னில் உள்ள பிரபல மணிக்கூண்டு மீது பெயிண்ட் தாக்குதல்

-

மெல்போர்னில் உள்ள பிரபல ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தை பெயிண்ட் அடித்து சிதைத்த நபர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதனை சீரமைத்து சுத்தம் செய்ய கணிசமான தொகை செலவிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில் நிலையம் அருகே உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை புதன்கிழமை இரவு சிலர் வண்ணப்பூச்சு பூசி சிதைத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக மெட்ரோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மெல்போர்ன் நகரின் பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் மணிக்கூண்டு கோபுரத்தை மேலும் சேதமடையாத வகையில் பாதுகாப்பாகச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...