Newsவிக்டோரியா உட்பட பல மாநில மக்களுக்கான வாரயிறுதி குறித்த சிறப்பு அறிவிப்பு

விக்டோரியா உட்பட பல மாநில மக்களுக்கான வாரயிறுதி குறித்த சிறப்பு அறிவிப்பு

-

அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் பல மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அண்டார்டிகாவிற்கு அருகில் இருந்து வரும் காற்று ஓட்டம் இந்த வார இறுதியில் இருந்து தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டாஸ்மேனியாவில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் வரை பனிப்பொழிவு சாத்தியம் மற்றும் அடுத்த வாரம் பல பகுதிகளில் வெப்பநிலை குறைய உள்ளது.

டாஸ்மேனியா மாநிலம் அருகே கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளை முதல் வரும் செவ்வாய்கிழமை வரை டாஸ்மேனியா, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 90கிமீ/மணிக்கு அதிகமான பலத்த காற்று மற்றும் கனமழை தாஸ்மேனியா மற்றும் விக்டோரியாவை தொடர்ந்து பாதிக்கும்.

இந்த வார இறுதியில் வீசும் காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் அது குறித்தும் மக்கள் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...