NewsOpen AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

Open AI நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய Microsoft நிறுவனம்

-

Chat GPT உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து Microsoft விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு நிறுவனம் சாதகமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இன்னமும் தங்களின் பங்களிப்பு தேவையிருக்காது என Microsoft விலகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த கடித்தத்தில் Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (Observer) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக Microsoft தெரிவித்துள்ளாது.

செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள Microsoft, கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசொப்ட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் 13 பில்லியன் அமெரிக்க டொலர் Open AI நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மேல்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஏ.ஐ. நிறுவனங்களின் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) குறித்து ஐரோப்பிய யூனியன் ஆழமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம், பிரிட்டன் போட்டி ஆணையம் அமைப்புகளும் ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது Open AI.

Open AI தனது முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களான மைக்ரோசொப்ட், ஆப்பிள், ட்ரைவ் கெப்பிடல், கோஸ்லா வென்சர்ஸ் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கும் அணுகுமுறை கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Latest news

அவுஸ்திரேலியாவில் எகிறியுள்ள உள்நாட்டு விமானக் கட்டணம்

பிராந்திய விமான நிறுவனங்களான Rex மற்றும் Bonza ஆகியவை ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. விமானக் கட்டணம்...

Instagram-இல் அறிமுகப்படுத்தப்படும் அதிரடி பாதுகாப்பு முறை

பதின்ம வயதினரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான Instagram புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, Instagram பயன்படுத்தும் பதின்ம வயதினரின் பெற்றோர்கள்...

NSW-வில் மாறி வரும் வாகன அபராதம் விதிக்கும் முறை

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதத்...

Online Marketing நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கான புதிய சட்டம்

Internet Marketing சேவையின் ஜாம்பவானான Amazon, அடுத்த ஆண்டு 2025 முதல், நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. தலைமை...

மெல்பேர்ணில் நடைபெறும் மற்றுமொரு பாரிய போராட்டம்

கட்டுமானம், வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் சங்கத்தின் (CFMEU) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று மெல்பேர்ணில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களால் நேற்று...

விக்டோரியாவின் வெளிநாட்டு மாணவர்களின் குறைப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை சேர்க்க மத்திய அரசு விதித்துள்ள வரம்புக்கு உட்பட்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்க...