Breaking Newsஇரு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் - 226 ஆண்டுகள்...

இரு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் – 226 ஆண்டுகள் சிறை

-

அமெரிக்காவில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.

தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 53 வயதுடைய பிரையன் ஸ்டீவ் ஸ்மித் என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அலஸ்கா மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.

பாலியல் தொழிலாளியொருவர் இவரது காரிலிருந்து தொலைபேசியை திருடி அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் இரண்டு பெண்களை கொடூரமாக கொன்றமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, அந்த பெண் பொலிஸாருக்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து, 2019இல் ஸ்மித் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில், அலஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கேத்லீன் ஹென்றி என்பவரையும் 52 வயதுடைய வெரோனிகா அபூச்சுக் என்பவரையும் கொன்றதை ஸ்மித் ஒப்புக்கொண்டுள்ளார்.

அலஸ்காவின் ஆங்கோரேஜில் உள்ள ஹோட்டலொன்றில் கேத்லீன் ஹென்றியை கொடூரமாக கொன்று புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், அவரது மனைவி வீட்டில் இல்லாத போது, வெரோனிகாவை அழைத்துச் சென்றபோது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டுக் கொன்று புதைத்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அலஸ்கா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஸ்மித் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (13) இரு பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் தலா 99 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம், சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...