Breaking Newsஇரு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் - 226 ஆண்டுகள்...

இரு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் – 226 ஆண்டுகள் சிறை

-

அமெரிக்காவில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.

தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 53 வயதுடைய பிரையன் ஸ்டீவ் ஸ்மித் என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அலஸ்கா மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.

பாலியல் தொழிலாளியொருவர் இவரது காரிலிருந்து தொலைபேசியை திருடி அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் இரண்டு பெண்களை கொடூரமாக கொன்றமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, அந்த பெண் பொலிஸாருக்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து, 2019இல் ஸ்மித் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில், அலஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கேத்லீன் ஹென்றி என்பவரையும் 52 வயதுடைய வெரோனிகா அபூச்சுக் என்பவரையும் கொன்றதை ஸ்மித் ஒப்புக்கொண்டுள்ளார்.

அலஸ்காவின் ஆங்கோரேஜில் உள்ள ஹோட்டலொன்றில் கேத்லீன் ஹென்றியை கொடூரமாக கொன்று புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், அவரது மனைவி வீட்டில் இல்லாத போது, வெரோனிகாவை அழைத்துச் சென்றபோது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டுக் கொன்று புதைத்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அலஸ்கா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஸ்மித் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (13) இரு பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் தலா 99 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம், சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...