Breaking Newsஇரு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் - 226 ஆண்டுகள்...

இரு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் – 226 ஆண்டுகள் சிறை

-

அமெரிக்காவில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.

தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 53 வயதுடைய பிரையன் ஸ்டீவ் ஸ்மித் என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அலஸ்கா மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.

பாலியல் தொழிலாளியொருவர் இவரது காரிலிருந்து தொலைபேசியை திருடி அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் இரண்டு பெண்களை கொடூரமாக கொன்றமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, அந்த பெண் பொலிஸாருக்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து, 2019இல் ஸ்மித் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில், அலஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கேத்லீன் ஹென்றி என்பவரையும் 52 வயதுடைய வெரோனிகா அபூச்சுக் என்பவரையும் கொன்றதை ஸ்மித் ஒப்புக்கொண்டுள்ளார்.

அலஸ்காவின் ஆங்கோரேஜில் உள்ள ஹோட்டலொன்றில் கேத்லீன் ஹென்றியை கொடூரமாக கொன்று புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், அவரது மனைவி வீட்டில் இல்லாத போது, வெரோனிகாவை அழைத்துச் சென்றபோது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டுக் கொன்று புதைத்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அலஸ்கா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஸ்மித் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (13) இரு பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் தலா 99 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம், சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...