Newsசனிக்கிழமை தோறும் இளைஞரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு - பீதியில்...

சனிக்கிழமை தோறும் இளைஞரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு – பீதியில் மக்கள்

-

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த 24 வயதுடைய விகாஸ் துபே என்பவரை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது. அதுவும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்த போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சைக்காக நிறைய செலவு செய்ததால் விகாஸ் துபேவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை அணுகிய அவர், சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் கிரி கூறும்போது, “விகாஸ் துபே நிதியுதவி கேட்டு மாவட்ட ஆட்சியரை அணுகி உள்ளார். அரசு மருத்துவமனைக்கு சென்றால் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என நான் ஆலோசனை வழங்கினேன். மேலும், அவரை பாம்புதான் கடித்ததா என்பதை ஆராய வேண்டிஉள்ளது. அத்துடன் பாம்பு கடித்ததும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரிருநாளில் குணமடைந்துள்ளார். எனவே, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் திறமை குறித்தும் ஆராய வேண்டி உள்ளது’’ என்றார்.

விகாஸை கடித்தது ஒரே பாம்பா அல்லது வெவ்வேறு பாம்புகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, விகாஸ் ‘பாம்பு குத்தம்’ செய்து விட்டதால் அவரை பாம்பு கொல்லாமல் விடாது எனவும் அப்பகுதி மக்கள் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் புதிதல்ல. கடந்த 1995-ல் அலிகரின் பிசோவோ கிராமத்தில் ஒரு விவசாயி உழவு இயந்திரம் ஓட்டிச் சென்றபோது, 2 பாம்புகள் மீது ஏற்றி கொன்று விட்டார். இதனால் பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே பழிவாங்கப் போகிறது என பீதி கிளம்பியது.

இதையடுத்து, அப்பகுதியில் விளைந்த பயிர்களின் இலைகளில் பாம்பு தோல் போன்ற கோடுகள் தோன்றின. இறந்த பாம்புகளின் ஆவிதான் இலைகளில் கோடு போடுகின்றன என்றும் நாக பூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதுபோல பூஜை செய்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, இலைகள் மீது பரவியது ஒரு வகை வைரஸ் என கூறியபின் பீதி அடங்கியது.

அதேபோல் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாம்புடன் காதல் ஏற்பட்டதாக ஒரு புரளி கிளம்பியது. அதனால் அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப்பெண்ணை அன்பாக கொத்திவிட்டு செல்வதாகவும், அதேநேரம் விஷம்கக்குவதில்லை எனவும் கூறினர். ஆனால் அது விஷமற்ற பாம்பு என்றும், அந்தப் பெண் பிரபலமாவதற்காக இப்படி செய்தார் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து இந்து தமிழ் நாளேட்டிடம் வைல்ட்லைப் எஸ்.ஓ.எஸ் இணை நிறுவனர் கார்த்திக் சத்யநாராயணன் கூறும்போது, “பாம்புகளை வைத்து உ.பியின் மேற்கு பகுதியில் ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. எனவே, தற்போது தொடங்கியுள்ள சிவனுக்கான ஸ்ரவண மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பாம்புகளின் புனித நாள் என ஏமாற்றுவது வழக்கமாகிவிட்டது’’ என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...