Canberraசிட்னி உட்பட மூன்று முக்கிய நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கை

சிட்னி உட்பட மூன்று முக்கிய நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கை

-

சிட்னி, மெல்போர்ன் மற்றும் கான்பரா ஆகிய நகரங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று, பனி மற்றும் மழையால் சேதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மன் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பரா ஆகிய பகுதிகளில் குளிர் காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளில் வழமையான பெறுமதியை விட 8 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தஸ்மேனியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த வாரம் குளிர் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே NSW ஆல்பைன்ஸ் முழுவதும் பனி பெய்து வருவதால், திங்கட்கிழமை பலத்த காற்றுடன் கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டருக்கு மேல் வசிப்பவர்களுக்கு பனிப்புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...