Melbourneமெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - 4 குழந்தைகள் பலி

மெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து – 4 குழந்தைகள் பலி

-

மெல்போர்னின் பாயிண்ட் குக் பகுதியில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமானதுடன், புகை மூட்டப்பட்டு தீக்காயங்களுடன் குழந்தைகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ் தளத்தில் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், வீட்டில் இருந்த அலாரம் காரணமாக அங்கிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டில் தீ எச்சரிக்கைக் கருவிகள் இல்லாதிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

டெலிகிராமிற்கு $1 மில்லியன் அபராதம் விதித்த ஆஸ்திரேலிய அரசாங்கம்

பயங்கரவாதம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களைப் புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு டெலிகிராமிற்கு கிட்டத்தட்ட $1 மில்லியன்...

பெரும் ஆபத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் மீனவர்கள்

கோல்ட் கோஸ்ட்டில் காளை சுறாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கடலோரப் பகுதிகளில் மீன் எண்ணிக்கை குறைந்து வருவதாக மீன்வள நிபுணர் லூக்...

$3 மில்லியன் லாட்டரி வெற்றியாளரைக் தேடும் Lotto

நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர் ஒருவர் சமீபத்திய லாட்டரி குலுக்கல்லில் $3 மில்லியன் பரிசை வென்றுள்ளார். இது பிப்ரவரி 22 சனிக்கிழமை நடைபெற்ற லாட்டரி குலுக்கல்லில் இருந்து...

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

வரவிருக்கும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் தொடர்பான இரண்டு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் 24ம் திகதி வெளியிடப்பட்டுள்ளன. Freshwater Strategic Poll மற்றும் Reslove Political Moniter ஆகியவற்றின்...

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

வரவிருக்கும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் தொடர்பான இரண்டு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் 24ம் திகதி வெளியிடப்பட்டுள்ளன. Freshwater Strategic Poll மற்றும் Reslove Political Moniter ஆகியவற்றின்...

உலகின் சிறந்த Coffee Shop உள்ள நாடாக ஆஸ்திரேலியா!

சிட்னியில் உள்ள Toby’s Estate Coffee Roasters உலகின் சிறந்த காபி கடையாக பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த Madrid Coffee விழாவில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. உலகின்...