Melbourneமெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - 4 குழந்தைகள் பலி

மெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து – 4 குழந்தைகள் பலி

-

மெல்போர்னின் பாயிண்ட் குக் பகுதியில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமானதுடன், புகை மூட்டப்பட்டு தீக்காயங்களுடன் குழந்தைகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ் தளத்தில் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், வீட்டில் இருந்த அலாரம் காரணமாக அங்கிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டில் தீ எச்சரிக்கைக் கருவிகள் இல்லாதிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...