Melbourneமெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - 4 குழந்தைகள் பலி

மெல்போர்ன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து – 4 குழந்தைகள் பலி

-

மெல்போர்னின் பாயிண்ட் குக் பகுதியில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமானதுடன், புகை மூட்டப்பட்டு தீக்காயங்களுடன் குழந்தைகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ் தளத்தில் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், வீட்டில் இருந்த அலாரம் காரணமாக அங்கிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டில் தீ எச்சரிக்கைக் கருவிகள் இல்லாதிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...