Newsஇன்ஸ்டாவில் கணவரை விவாகரத்து செய்தாக அறிவித்த டுபாய் இளவரசி

இன்ஸ்டாவில் கணவரை விவாகரத்து செய்தாக அறிவித்த டுபாய் இளவரசி

-

டுபாய் இளவரசி ஷேகா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை, இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் விவாகரத்து செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமரும், டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டா பக்கத்தில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி.” என்று தெரிவித்துள்ளார்.

ஷைக்கா மஹ்ரா-வுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த ஆண்டுதான் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், மஹ்ரா கணவரை விவாகரத்து செய்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹ்ராவின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பை அடுத்து, இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முன் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, இளவரசி மஹ்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு இரகசிய பகிர்வை வெளியிட்டிருந்தார்.

தனது குழந்தையை அரவணைத்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்த அவர், அதன் கீழ் “நாங்கள் இருவர் மட்டும்” என்று எழுதி இருந்தார். இதன்மூலம், மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வது என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ளார் என்பதை உணர்த்துவதாக இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ள மஹ்ரா, மேலும் முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.

Latest news

இட்லி தொண்டையில் சிக்கியதில் பறிபோனது ஒருவரின் உயிர்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக...

‘யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

'யாகி' சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'யாகி' சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில்...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...