Newsரகசிய சேமிப்பிலுள்ள அரியவகை பறவைகளின் ஆயிரக்கணக்கான முட்டைகள்

ரகசிய சேமிப்பிலுள்ள அரியவகை பறவைகளின் ஆயிரக்கணக்கான முட்டைகள்

-

அழிந்து வரும் மற்றும் அரிய வகை பறவைகளின் 3,404 முட்டைகள் ஹோபார்ட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத பறவை வர்த்தகம் தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த முட்டைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அழிந்து வரும் பறவை இனங்களின் முட்டைகள் உட்பட பல பறவைகளின் முட்டைகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக டாஸ்மேனியா மாநிலத்தில் நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை, ஹோபார்ட் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட சில முட்டைகள் மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் பறவைகளின் முட்டைகள் என தெரியவந்துள்ளது.

பறவை முட்டைகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 500,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குற்றங்களின் கீழ் வரும் பறவை முட்டைகளின் வர்த்தகம் காரணமாக பல பறவை இனங்கள் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முட்டைகள் எந்தப் பறவையினத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...