Newsரகசிய சேமிப்பிலுள்ள அரியவகை பறவைகளின் ஆயிரக்கணக்கான முட்டைகள்

ரகசிய சேமிப்பிலுள்ள அரியவகை பறவைகளின் ஆயிரக்கணக்கான முட்டைகள்

-

அழிந்து வரும் மற்றும் அரிய வகை பறவைகளின் 3,404 முட்டைகள் ஹோபார்ட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத பறவை வர்த்தகம் தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த முட்டைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அழிந்து வரும் பறவை இனங்களின் முட்டைகள் உட்பட பல பறவைகளின் முட்டைகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக டாஸ்மேனியா மாநிலத்தில் நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை, ஹோபார்ட் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட சில முட்டைகள் மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் பறவைகளின் முட்டைகள் என தெரியவந்துள்ளது.

பறவை முட்டைகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 500,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குற்றங்களின் கீழ் வரும் பறவை முட்டைகளின் வர்த்தகம் காரணமாக பல பறவை இனங்கள் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முட்டைகள் எந்தப் பறவையினத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...