Newsஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

-

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே தாக்குதல்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பாரிஸில் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு கடுமையான பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஆடைகளை விளையாட்டு கிராமத்திற்கு வெளியே அணிவதைத் தவிர்க்கவும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன், பாரிஸில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஆயுதமேந்திய அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், பிரான்ஸ் தலைநகரில் ஆஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் ஒலிம்பிக் தலைவர்களிடையே கவலையை எழுப்பியுள்ளன.

கடந்த வார இறுதியில் அவுஸ்திரேலிய சிறுமி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், திங்கட்கிழமை இரவு இலங்கை ஊடக நிறுவனமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்ஸ் சென்ற இரு உறுப்பினர்களை கொள்ளையடிக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...