Newsஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

-

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே தாக்குதல்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பாரிஸில் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு கடுமையான பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஆடைகளை விளையாட்டு கிராமத்திற்கு வெளியே அணிவதைத் தவிர்க்கவும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன், பாரிஸில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஆயுதமேந்திய அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், பிரான்ஸ் தலைநகரில் ஆஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் ஒலிம்பிக் தலைவர்களிடையே கவலையை எழுப்பியுள்ளன.

கடந்த வார இறுதியில் அவுஸ்திரேலிய சிறுமி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், திங்கட்கிழமை இரவு இலங்கை ஊடக நிறுவனமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்ஸ் சென்ற இரு உறுப்பினர்களை கொள்ளையடிக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...