NewsNSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

NSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மெக்குவாரியில், சுறா தாக்கியதால், Surfer ஒருவரின் கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான 23 வயதான அலைச்சறுக்கு இளைஞனின் கால் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடலோரத்தில் கரையொதுங்கியதாகவும், மீள் பொருத்துதலுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை அவர் போர்ட் மெக்வாரியில் உள்ள நார்த் ஷோர் கடற்கரையில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது பெரிய சுறா தாக்கியது.

சுறா விளையாட்டு வீரரை பின்தொடர்ந்து சென்று கடலுக்குள் இழுத்து செல்ல முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் அவர் சிரமப்பட்டு கரைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தை கண்டதும் அருகில் கூடியிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அலைகளால் கரை ஒதுங்கிய பாதம் ஐஸ் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ஃபர் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு சர்ஃபிங்கிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...