NewsNSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

NSW-வில் சுறா தாக்குதலில் கரை ஒதுங்கிய Surfer-ன் கால்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மெக்குவாரியில், சுறா தாக்கியதால், Surfer ஒருவரின் கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான 23 வயதான அலைச்சறுக்கு இளைஞனின் கால் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடலோரத்தில் கரையொதுங்கியதாகவும், மீள் பொருத்துதலுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை அவர் போர்ட் மெக்வாரியில் உள்ள நார்த் ஷோர் கடற்கரையில் சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது பெரிய சுறா தாக்கியது.

சுறா விளையாட்டு வீரரை பின்தொடர்ந்து சென்று கடலுக்குள் இழுத்து செல்ல முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் அவர் சிரமப்பட்டு கரைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தை கண்டதும் அருகில் கூடியிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அலைகளால் கரை ஒதுங்கிய பாதம் ஐஸ் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ஃபர் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு சர்ஃபிங்கிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...