Newsஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்

ஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்

-

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட மலேசிய அணி, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தது.

ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி தீனா, பியர்லி அணிதான்.

நேற்று அரையிறுதிப் போட்டியில் சீனாவின் Chen Qing Chen, Jia Yi Fan இணையை எதிர்கொண்டது தீனா, பியர்லி அணி.

ஆனால், 12-21, 21-18, 15-21 என்ற கணக்கில் தீனா, பியர்லி அணி தோல்வியடைந்ததால், இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கைநழுவியது.

முக்கியமான விடயம் என்னவென்றால், தீனா, பியர்லி அணி உலகின் No 12ஆவது இடத்தில் உள்ளவர்கள். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சீன அணி உலகில் No1 இடத்தில் இருப்பவர்கள்.

ஆக, தோல்வியடைந்தாலும், உலகின் No 1அணியிடம் மோதி, போராடித்தான் தீனா, பியர்லி அணி தோல்வியை சந்தித்துள்ளது என்பதால், அதுவும் ஒரு கௌரவமே.

இன்னொரு நல்ல விடயம் என்னவென்றால், இன்றைய போட்டியில் வெண்கலம் வெல்லும் ஒரு வாய்ப்பு தீனா, பியர்லி அணிக்கு உள்ளது என்பதுதான்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...