Newsஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்

ஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்

-

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட மலேசிய அணி, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தது.

ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி தீனா, பியர்லி அணிதான்.

நேற்று அரையிறுதிப் போட்டியில் சீனாவின் Chen Qing Chen, Jia Yi Fan இணையை எதிர்கொண்டது தீனா, பியர்லி அணி.

ஆனால், 12-21, 21-18, 15-21 என்ற கணக்கில் தீனா, பியர்லி அணி தோல்வியடைந்ததால், இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கைநழுவியது.

முக்கியமான விடயம் என்னவென்றால், தீனா, பியர்லி அணி உலகின் No 12ஆவது இடத்தில் உள்ளவர்கள். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சீன அணி உலகில் No1 இடத்தில் இருப்பவர்கள்.

ஆக, தோல்வியடைந்தாலும், உலகின் No 1அணியிடம் மோதி, போராடித்தான் தீனா, பியர்லி அணி தோல்வியை சந்தித்துள்ளது என்பதால், அதுவும் ஒரு கௌரவமே.

இன்னொரு நல்ல விடயம் என்னவென்றால், இன்றைய போட்டியில் வெண்கலம் வெல்லும் ஒரு வாய்ப்பு தீனா, பியர்லி அணிக்கு உள்ளது என்பதுதான்.

Latest news

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று நோய் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய்...

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

Graffiti பிரச்சனைக்கு தீர்வை வழங்கும் மெல்பேர்ண் கவுன்சில் 

மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...