Melbourneமெல்போர்னில் துப்பாக்கிச் சூடு - அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

மெல்போர்னில் துப்பாக்கிச் சூடு – அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

-

மெல்போர்னின் பர்ன்சைட் ஹைட்ஸ் பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஒருவர் காருக்குள் இருப்பதாக நேற்று இரவு 9.10 மணியளவில் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், காரில் இருந்த நபரை கால் நடையாக நெருங்கி, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெறும் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கரோலின் ஸ்பிரிங்ஸ் ஷாப்பிங் சென்டருக்கு அருகே ஒரு இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயமடைந்த ஒரு நாளுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் மெல்பேர்ன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிஸார் வருவதற்குள் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...