Newsகேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்!

கேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்!

-

கேரள மண்சரிவில் காட்டு யானையொன்று முதியவர் ஒருவரையும் அவரது பேத்தியையும் காப்பாற்றிய சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300இற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், முண்டகையில் உள்ள தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா தனது குடும்பத்தினருடன் கேரளாவில் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்த வேளையில் அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பித்து காபி மரங்களால் மூடப்பட்ட குன்றில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக நின்றிருந்தது.

அத்தனை காட்டு யானைகளுடன் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். மறுநாள் காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானை எங்களை எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் எங்களை பாதுகாப்பதற்காக அங்கேயே நின்றிருக்கிறது.

இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளதுடன் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...