Sydneyஅளவுக்கு மீறிய மது - பல வாகனங்கள் சேதம் - சாரதி...

அளவுக்கு மீறிய மது – பல வாகனங்கள் சேதம் – சாரதி கைது

-

சாதாரண அளவை விட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்தி வாகனத்தை ஓட்டி பல வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தியதற்காக சிட்னி சாரதி ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஓட்டிச் சென்ற கார் மேலும் இரு வாகனங்களுடன் மோதியதை அடுத்து, குறித்த நபர் சட்டத்திற்குப் புறம்பாக மது அருந்தியதை விட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை 12.15 மணியளவில் Peakhurst பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் வாகனங்களில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுக்கு இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் அம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 66 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...