Newsவிக்டோரியாவில் சமந்தா மர்பி வழக்கில் புதிய திருப்பம்

விக்டோரியாவில் சமந்தா மர்பி வழக்கில் புதிய திருப்பம்

-

விக்டோரியா மாநிலத்தின் Barrelat பகுதியில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சமந்தா மர்பி என்ற பெண்ணின் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளம் சந்தேக நபர் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதனால் அவர் காணாமல் போனது குறித்த பதிலுக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி உடல்நலக் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறிய 51 வயதுடைய இந்த மூன்று பிள்ளைகளின் தாயாரைப் பற்றி 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் வழக்கமாக தினமும் உடற்பயிற்சி செய்யும் பகுதி மற்றும் அருகில் உள்ள வனப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை பெண்ணின் தொலைபேசி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், விக்டோரியன் பொலிசார் மர்பியின் பல்லாரட் வீட்டிற்கு அருகே ஒரு சோதனையின் போது அவரது தொலைபேசியைக் கண்டுபிடித்ததாக வெளிப்படுத்தினர், இது துப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் இதுவரை சமந்தா மர்பி தொடர்பில் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், இது தொடர்பில் சந்தேகநபரான குறித்த இளைஞரிடமிருந்து எதுவும் கூறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் நீதிமன்ற திகதியில் காணாமல் போன பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறும் என குடும்ப உறவினர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...