Newsபாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்

பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்

-

பங்களாதேஷின் அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் அதிகரித்துள்ளதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

போராட்டக்குழுவினர் பிரதமரின் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவி விலகியதன் மூலம் பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அந்நாட்டு இராணுவத் தளபதி வீகார் உஸ் சமன் அறிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி தலைநகரின் தெருக்களில் பேரணியாகச் சென்று பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பின்னர் அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Latest news

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நுகர்வோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. Amazon, eBay மற்றும் Anker...

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால, தொலைந்து போன நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெனிகோ...

விக்டோரியாவில் 14 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ள சாலை விபத்து இறப்புகள்

கடந்த 72 மணி நேரத்தில் விக்டோரியாவில் நடந்த பத்து விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணின் வடகிழக்கில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதியதில்...

மூன்றாம் உலகப் போர் குறித்து நேட்டோ எச்சரிக்கை

சீன ஜனாதிபதியும் ரஷ்ய பிரதமரும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே கூறுகிறார். சீன மற்றும்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்கா நீச்சல் தளத்தில் விழுந்த குழந்தை

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்காவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்த ஒரு சிறு குழந்தையை அவசர சேவைகள் மீட்டுள்ளன. பிரபலமான Dales Gorge நீச்சல் தளத்தில் சிறுவன்...

45 வயது நபரை மணந்த 6 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆறு வயது சிறுமியை 45 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணை அவளது தந்தை...