Sportsபாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

-

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை பிரான்ஸைச் சேர்ந்த table tennis வீராங்கனை ஒருவர் அசரவைத்துள்ளார் .

முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த table tennis வீராங்கனையான Bruna Alexandre, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.

29 வயதான Bruna Alexandre, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் இரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் Bruna Alexandre பெற்றுள்ளார்.

இது குறித்து Alexandre கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.

Alexandre தன்னுடைய 7 வயதில் டேபள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், ஒரு கையால் விளையாடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஆனால், அவர் இடது கையால் பந்தை மேலே தூக்கி அடித்து பந்தை சுழல வைத்து திருப்பி அடிக்கும் திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய திறமைகளை மாற்றியமைக்க முடிந்தது. தற்போது சர்வீஸ் எனது வலிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று திறமையான ஸ்கேட்போர்ட் மற்றும் சைக்கிளிங்கிலும் திறமைபெற்ற Alexandre கூறினார்.

Alexandre ஏற்கனவே பதக்கங்களை வென்ற பராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக திங்கட்கிழமை களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.

தோல்விக்குப் பிறகு கூறும்போது, “தோல்விக்குப் பின்னர் உங்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் இருக்கிறதா? என்பதைப் பொருள்படுத்தாமல் எல்லாம் சாத்தியம் என்பதைக் காட்ட வேண்டும்” என்றும் கூறினார்.

உற்சாகமான வரவேற்புக்கு பிரான்ஸ் மக்களுக்கு நன்றி கூறிய அவர், “இன்று கனவு நனவாகி இருப்பதை நான் கொண்டாடுகிறேன். இன்னும் பல நாட்களுக்கு கொண்டாடுவேன்” என்றார்.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...