Sportsபாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

-

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை பிரான்ஸைச் சேர்ந்த table tennis வீராங்கனை ஒருவர் அசரவைத்துள்ளார் .

முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த table tennis வீராங்கனையான Bruna Alexandre, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.

29 வயதான Bruna Alexandre, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் இரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் Bruna Alexandre பெற்றுள்ளார்.

இது குறித்து Alexandre கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.

Alexandre தன்னுடைய 7 வயதில் டேபள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், ஒரு கையால் விளையாடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஆனால், அவர் இடது கையால் பந்தை மேலே தூக்கி அடித்து பந்தை சுழல வைத்து திருப்பி அடிக்கும் திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய திறமைகளை மாற்றியமைக்க முடிந்தது. தற்போது சர்வீஸ் எனது வலிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று திறமையான ஸ்கேட்போர்ட் மற்றும் சைக்கிளிங்கிலும் திறமைபெற்ற Alexandre கூறினார்.

Alexandre ஏற்கனவே பதக்கங்களை வென்ற பராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக திங்கட்கிழமை களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.

தோல்விக்குப் பிறகு கூறும்போது, “தோல்விக்குப் பின்னர் உங்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் இருக்கிறதா? என்பதைப் பொருள்படுத்தாமல் எல்லாம் சாத்தியம் என்பதைக் காட்ட வேண்டும்” என்றும் கூறினார்.

உற்சாகமான வரவேற்புக்கு பிரான்ஸ் மக்களுக்கு நன்றி கூறிய அவர், “இன்று கனவு நனவாகி இருப்பதை நான் கொண்டாடுகிறேன். இன்னும் பல நாட்களுக்கு கொண்டாடுவேன்” என்றார்.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...