Sportsபாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

-

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை பிரான்ஸைச் சேர்ந்த table tennis வீராங்கனை ஒருவர் அசரவைத்துள்ளார் .

முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த table tennis வீராங்கனையான Bruna Alexandre, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.

29 வயதான Bruna Alexandre, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் இரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் Bruna Alexandre பெற்றுள்ளார்.

இது குறித்து Alexandre கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.

Alexandre தன்னுடைய 7 வயதில் டேபள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், ஒரு கையால் விளையாடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஆனால், அவர் இடது கையால் பந்தை மேலே தூக்கி அடித்து பந்தை சுழல வைத்து திருப்பி அடிக்கும் திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய திறமைகளை மாற்றியமைக்க முடிந்தது. தற்போது சர்வீஸ் எனது வலிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று திறமையான ஸ்கேட்போர்ட் மற்றும் சைக்கிளிங்கிலும் திறமைபெற்ற Alexandre கூறினார்.

Alexandre ஏற்கனவே பதக்கங்களை வென்ற பராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக திங்கட்கிழமை களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.

தோல்விக்குப் பிறகு கூறும்போது, “தோல்விக்குப் பின்னர் உங்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் இருக்கிறதா? என்பதைப் பொருள்படுத்தாமல் எல்லாம் சாத்தியம் என்பதைக் காட்ட வேண்டும்” என்றும் கூறினார்.

உற்சாகமான வரவேற்புக்கு பிரான்ஸ் மக்களுக்கு நன்றி கூறிய அவர், “இன்று கனவு நனவாகி இருப்பதை நான் கொண்டாடுகிறேன். இன்னும் பல நாட்களுக்கு கொண்டாடுவேன்” என்றார்.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...