Newsஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை படைத்த நபர்

ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை படைத்த நபர்

-

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் முறியடித்துள்ளார்.

ஒவ்வொரு சாதனையாக முறியடித்த இவருக்கு போரடித்து விட்டதோ என்னவோ, சமீபத்தில் அவர் திடீரென லண்டனிலுள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்துக்குச் சென்று, ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்து விட்டுச் சென்றுள்ளார்.

அதாவது, முதலில் ஜக்கிலிங் வித்தை எனப்படும் 3 பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரே தூக்கிப்போட்டு ஒரு நிமிடத்துக்குள் அதிக தடவைகள் அப்பிள்களைக் கடித்த சாதனையை டேவிட் ரஷ் முறியடித்து, 198 தடவைகள் அப்பிள்களைக் கடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

2ஆவது சாதனையாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 போத்தல்களின் மூடிகளில் 10 தடவைகள் மாற்று கைகளைப் பயன்படுத்தி வேகமாக துள்ளச் செய்தார். மிகவும் நூதனமாக இச்சாதனையை வெறும் 2.09 நிமிடங்களில் செய்து முடித்து அசத்தியுள்ளார்.

அதேபோல் 30 விநாடிகளில் கையின் பக்கங்களை பேஸ்போலால் மாறி மாறி அடித்த சாதனையையும் அவர் முறியடித்தார். அவர் 125 தடவைகள் பந்தை இவ்வாறு அடித்து அசத்தியுள்ளார்.

இதேபோன்று வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்துப் பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 விநாடிகளில் அதிக டி-சேர்ட்கள் அணிதல், 10 டொய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைத்தல், அதிகளவு தண்ணீரை 30 விநாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லீற்றர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரோ மூலம் மிக வேகமாகக் குடிப்பது உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனையை ஒரே நாளில் இந்த சாதனை மனிதன் முறியடித்துக் காட்டியுள்ளார்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...