Newsவீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் - பங்களாதேஷில் இந்துக்கள் போராட்டம்

வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் – பங்களாதேஷில் இந்துக்கள் போராட்டம்

-

பங்களாதேஷில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து சிறுபான்மையினரான இந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஒகஸ்ட் 5-ஆம் திகதி பங்களாதேஷ் பிரதமா் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், அந்நாட்டில் உள்ள 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரண்டு பங்களாதேஷ் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அங்குள்ள இந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு இந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதலை கண்டித்து பங்களாதேஷ் தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் இந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்று தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தினா்.

அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அந்நாட்டில் சிறுபான்மையினரை துன்புறுத்துவோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு தீா்ப்பாயங்கள் அமைக்க வேண்டும், பாராளுமன்ற இடங்களில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்து போராட்டாக்காரா்கள் வலியுறுத்தினா்.

Latest news

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

அடுத்த 48 மணி நேரத்திற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கரி பொருட்கள் கிடைக்காது!

மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். ஊழியர்கள்...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...