Melbourneஆபத்தை குறைக்க தவறிய மெல்போர்ன் முதியோர் இல்லம் - விதிக்கப்பட்ட அபராதம்

ஆபத்தை குறைக்க தவறிய மெல்போர்ன் முதியோர் இல்லம் – விதிக்கப்பட்ட அபராதம்

-

மெல்போர்ன் முதியோர் இல்லத்தில் 90 வயது முதியவர் தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு $66,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஹீட்டரில் இருந்து இந்த முதியவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள Broadmeadows மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் கடுமையான காயத்தின் அபாயத்தைக் குறைக்க அல்லது அகற்றத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

நடக்க முடியாத நிலையில் உள்ள இந்த நபர் முதியோர் இல்லத்தில் கட்டிலில் இருந்து விழுந்து படுக்கைக்கு அருகில் உள்ள சுவரில் இருந்த ஹீட்டர் மீது கால்கள் மோதி பலத்த தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு விபத்தின் பின்னர் அவர் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், முதியோர் இல்லத்தில் COVID-19 நிலைமை காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, மருத்துவமனை அவரை முதியோர் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளித்தது.

பின்னர், தீக்காயங்கள் கடுமையாகி, தோல் ஒட்டுதல் மற்றும் விரல் துண்டிக்கப்பட்டு, மார்ச் 2022 இல் அவர் இறந்தார்.

இச்சம்பவத்துடன் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் இந்த விபத்தை ஏற்படுத்திய ஹீட்டர்களினால் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...