Breaking NewsBerwick-ல் உள்ள பல்பொருள் அங்காடி அருகே கத்திக்குத்து

Berwick-ல் உள்ள பல்பொருள் அங்காடி அருகே கத்திக்குத்து

-

விக்டோரியாவின் Berwick நகரில் உள்ள Woolworths பல்பொருள் அங்காடிக்கு வெளியே கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் Lyall Rd இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு முன்னர் ஆயுதம் ஏந்திய நபர் வன்முறையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் பலத்த காயமடைந்த 20 வயது இளைஞரும் மற்றுமொருவரும் அல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை, பொலிசார் வரும் வரை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபரோ அல்லது காயமடைந்தவர்களோ ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

சவுதி அரேபியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடம்

சவுதி அரேபியாவில் 50 பில்லியன் டொலர் மதிப்பில் 'முகாப்” என்ற திட்டமான உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமையவுள்ள இத்திட்டமானது...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா?...

ஆஸ்திரேலியா வருபவர்கள் இனி இந்த தொலைபேசிகளை கொண்டுவர வேண்டாம்

ஆஸ்திரேலியாவிற்கு இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவில் 3G சேவைகள் முற்றாக...

கைதிகளால் நிரம்பி வழியும் ஆஸ்திரேலிய மாநில சிறைகள்

அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அவசர திட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு வடமாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் சிறைவாசிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்காகவே இந்த...

டிக்கெட் மோசடிகளில் சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் டிக்கெட் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கிய...

குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதவியேற்பு

சிறிது நேரத்திற்கு முன்பு, குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் புதிய மாநில முதல்வராக David Crisafulli பதவியேற்றார். அதன்படி, குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதிவுகளில் இணைகிறார். மாநிலத்தின்...