Sportsதாய் நாட்டிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணிக்கு பிரதமர் வாழ்த்து

தாய் நாட்டிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணிக்கு பிரதமர் வாழ்த்து

-

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியை முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பிய அவுஸ்திரேலிய அணிக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியர்கள் பதக்கங்களை வெல்லாவிட்டாலும், இந்த வருட விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்த விதம் பெருமையளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தாய் நாட்டிற்கு திரும்பிய ஒவ்வொரு வீரரும் பதக்கம் கொண்டு வரவில்லையென்றாலும், ஒவ்வொருவரும் தங்கம் போல மதிப்புமிக்கவர்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற அணி தங்களால் இயன்றதை செய்து அவுஸ்திரேலியாவுக்கு மரியாதை அளித்து வெற்றி பெறாவிட்டாலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவுகளின் அழுத்தத்தினால் மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும், அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய அணிக்கு தயக்கமின்றி நிதி வழங்கியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இந்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிப்பதில்லை எனவும், விளையாட்டின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் நிச்சயமாக இவ்வாறான தியாகங்களைச் செய்வதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...