Melbourneமெல்போர்னில் கைவிடப்பட்ட பிரபலமான உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

மெல்போர்னில் கைவிடப்பட்ட பிரபலமான உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

-

மெல்போர்னின் ஆல்பர்ட் பூங்காவில் கைவிடப்பட்ட பிரபலமான உணவகம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குடியிருப்பாளர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இதுபோன்ற உணவகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் சமீபத்திய தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.

மெல்போர்னின் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள ஒரு அழகான ஏரிக்கரை உணவகமாக கருதப்பட்ட உணவகத்திற்கு இன்று அதிகாலை ஒரு குழுவினர் தீ வைத்ததையடுத்து சமூகத் தலைவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு உணவகம் மூடப்பட்டதிலிருந்து, பல்வேறு குழுக்கள் அதை கடுமையாக சேதப்படுத்தியதாகவும், வெவ்வேறு வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தியும், படங்கள் மற்றும் வார்த்தைகளை எழுதி அசுத்தப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தீ பரவியதில் சந்தேகத்திற்கு இடமானதாக போலீசார் கருதுகின்றனர், தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பார்க்ஸ் விக்டோரியா உணவகத்தை 2021 இல் மூடியதிலிருந்து, பல்வேறு குழுக்கள் அதைச் சேதப்படுத்தி வருகின்றன, மேலும் கடந்த 9 ஆம் தேதி அத்துமீறி நுழைந்து பார்ட்டி செய்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

அனைத்து விக்டோரியர்களுக்கும் சொந்தமான இந்த உணவகத்தை இவ்வாறு பாழடைவதற்கு பார்க்ஸ் விக்டோரியா நிறுவனம் அனுமதித்துள்ளமை வருந்தத்தக்கது என மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், இந்த பெறுமதியான சொத்தை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...