Melbourneமெல்போர்னைச் சுற்றி இரவில் ஏற்பட்ட பல தீ விபத்துகள்

மெல்போர்னைச் சுற்றி இரவில் ஏற்பட்ட பல தீ விபத்துகள்

-

நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை மெல்பேர்னைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பே வீதியிலுள்ள அழகு நிலையம் ஒன்றின் மீது காரொன்று மோதியதில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் காரும் கடையும் முற்றாக எரிந்து நாசமானதுடன் இரண்டு சிறுமிகளும் 40 வயதுடைய பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சலூனின் மேல் தளத்தில் வசித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு 9.15 மணியளவில் ரிச்மண்ட் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

தீ விபத்து தொடர்பில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.20 மணியளவில் பேட்டர்சன் லேக்ஸ் பகுதியில் உள்ள முதியோர் கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மேலும் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது, மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...