Newsவாகன விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள் - காரை ஓட்டிச் சென்றவருக்கு...

வாகன விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள் – காரை ஓட்டிச் சென்றவருக்கு 5 வருட சிறைத்தண்டனை

-

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான விபத்தில் சந்தேகத்திற்குரிய சாரதியின் சகோதரனும் மற்றுமொரு உறவினரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று ஆராதனைகளில் கலந்து கொண்ட சகோதரர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக சந்தேகநபர் இரண்டு தடவைகள் தேவாலயத்திற்குச் சென்றிருந்ததாகவும், அவர் தனது புதிய காரின் உயர் செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிக்கு 246 கி.மீ வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி இரண்டு மரங்களில் மோதியது.

அவரது 26 வயது உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 நாட்களில் அவரது 16 வயது சகோதரர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...