Newsஇத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு - ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு – ஒருவர் உயிரிழப்பு

-

இத்தாலியின் சிசிலி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாகவும், ஒரு வயது சிறுமி உட்பட 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள், இரண்டு பிரித்தானியர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு பிரான்ஸ் பிரஜைகள் உட்பட 22 பேர் இந்தக் கப்பலில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களில் நான்கு பிரித்தானிய பிரஜைகளும் இரண்டு அமெரிக்கர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த கப்பலில் இருந்த பெண் ஒருவர், உயிர்காக்கும் குழுவினர் வரும் வரை, தனது மகளை நீர் மேற்பரப்பில் பாதுகாப்பாக வைத்து தனது உயிரை காப்பாற்றிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

காணாமல் போனவர்களில் மைக் லிஞ்ச் என்ற பிரித்தானிய தொழிலதிபரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

184 அடி நீளமுள்ள இந்த பிரிட்டிஷ் கொடியுடைய கப்பல் அதன் 75 மீட்டர் உயரமான மாஸ்டுக்கு பிரபலமானது என்றும் கூறப்படுகிறது.

கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சிசிலி தீவுகளில் விடுமுறையைக் கழித்த சுற்றுலாப் பயணிகள் குழுவாகும் எனவும், பிரித்தானியக் கொடியின் கீழ் சொகுசுப் படகு பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...