Newsஇத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு - ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் கவிழ்ந்த சொகுசு படகு – ஒருவர் உயிரிழப்பு

-

இத்தாலியின் சிசிலி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாகவும், ஒரு வயது சிறுமி உட்பட 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள், இரண்டு பிரித்தானியர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு பிரான்ஸ் பிரஜைகள் உட்பட 22 பேர் இந்தக் கப்பலில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களில் நான்கு பிரித்தானிய பிரஜைகளும் இரண்டு அமெரிக்கர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த கப்பலில் இருந்த பெண் ஒருவர், உயிர்காக்கும் குழுவினர் வரும் வரை, தனது மகளை நீர் மேற்பரப்பில் பாதுகாப்பாக வைத்து தனது உயிரை காப்பாற்றிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

காணாமல் போனவர்களில் மைக் லிஞ்ச் என்ற பிரித்தானிய தொழிலதிபரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

184 அடி நீளமுள்ள இந்த பிரிட்டிஷ் கொடியுடைய கப்பல் அதன் 75 மீட்டர் உயரமான மாஸ்டுக்கு பிரபலமானது என்றும் கூறப்படுகிறது.

கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சிசிலி தீவுகளில் விடுமுறையைக் கழித்த சுற்றுலாப் பயணிகள் குழுவாகும் எனவும், பிரித்தானியக் கொடியின் கீழ் சொகுசுப் படகு பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...