Sydneyசிட்னியை பாதித்த ஒரு வலுவான நிலநடுக்கம் - ஏற்பட்டுள்ள பல சேதங்கள்

சிட்னியை பாதித்த ஒரு வலுவான நிலநடுக்கம் – ஏற்பட்டுள்ள பல சேதங்கள்

-

ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிட்னிக்கு வடக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுரங்க நகரான டென்மன் அருகே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது தெரியவந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சிட்னியைச் சுற்றியுள்ள டப்போ, மஸ்வெல்புரூக், நியூகேஸில், போர்ட் மெக்குவாரி மற்றும் மவுண்ட் ட்ரூயிட் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதனால் பல வீடுகள், உடைமைகள் சேதம் அடைந்துள்ளதுடன், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மஸ்வெல்ப்ரூக், டென்மன், ஜெர்ரிஸ் ப்ளைன்ஸ், புரீன், பெங்காலா ஆகிய பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிலநடுக்கத்திற்குப் பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...