Breaking Newsவிசா பிரச்சனைகளை தீர்க்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் விழிப்புணர்வு திட்டம்

விசா பிரச்சனைகளை தீர்க்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் விழிப்புணர்வு திட்டம்

-

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம், காலாவதியான விசாக்கள் மற்றும் விரைவில் காலாவதியாகும் விசாக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தின் Community Status Resolution Service team அடுத்த வாரம் நியூ சவுத் வேல்ஸில் உள்ள Griffith மற்றும் Leeton-னுக்கு சென்று விசா பிரச்சனைகளுக்கு மாற்று மற்றும் தீர்வுகளை வழங்கவுள்ளது.

வீசா காலாவதியாகிவிட்ட அல்லது காலாவதியாக இருக்கும் எவரையும் இந்த இடங்களுக்குச் செல்லுமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.

குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த நிகழ்வு பாதுகாப்பான இடமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடிவரவு பிரச்சனைகள் உள்ளவர்கள் பல்வேறு விசா நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கவும், வெளியேறும் உதவியைப் பெறவும், தற்போது சட்டவிரோதமாக இருக்கும் ஆனால் விசாவிற்கு தகுதியுடையவர்களுக்கான bridging visa-வைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.

அதன்படி, செவ்வாய் 27 மற்றும் 28 புதன்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிரிஃபித் நூலகத்தில் உள்துறை அமைச்சக அதிகாரிகளைக் காணலாம்.

28ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை லீடன் நூலகத்தில் வைத்து விசா பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Meet inside the Griffith Library, 228 Banna Avenue, Griffith, NSW:
– Tuesday 27 August from 9:30 am to 5:00 pm
– Wednesday 28 August from 9:30 am to 5:00 pm
– Meet inside the Leeton Library, Sycamore Street, Leeton, NSW:
– Thursday 29 August from 10:00 am to 5:00 pm

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...