Newsஅகதிகளை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த தாய் மற்றும் மகள்

அகதிகளை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த தாய் மற்றும் மகள்

-

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளை அழைத்து வந்ததாக தாய் மற்றும் மகள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ள 54 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு பெண்களுக்கும் படகு மூலம் அகதிகளை அழைத்து வந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு அவுஸ்திரேலியாவின் கிம்பர்லி கடற்கரைக்கு சுமார் 15 பேர் படகு மூலம் வந்தமை தொடர்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த அகதிகள் குழுவை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர், இந்த சம்பவத்துடன், எல்லை பாதுகாப்பு குறித்த கூட்டாட்சி எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாயும் மகளும் தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவர்களின் குற்ற வரலாறு குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் வெளிநாட்டு பயண தடை உட்பட பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் படகில் வரும் குடிமக்கள் அல்லாதவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று அழைக்கின்றனர், கடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சுமார் 95 பேர் நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...