Newsவேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க புதிய சட்டம்!

வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க புதிய சட்டம்!

-

தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்குச் சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பதுண்டு.

சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வேலை இல்லாத நேரத்தில் அமைதியாகப் பொழுதைக் கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.

இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பைத் துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.

இந்த நாடுகளின் வரிசையில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

அலுவலக நேரத்திற்குப் பிறகு தொழிலாளர்களைத் தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம்.

நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்குப் பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் அவுஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் எனப் பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பைத் துண்டிக்கும் உரிமைச் சட்டம் வரும் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...