NewsNT மாநிலத் தேர்தலில் தாராளவாதிகளுக்கு மாபெரும் வெற்றி

NT மாநிலத் தேர்தலில் தாராளவாதிகளுக்கு மாபெரும் வெற்றி

-

வடக்கு பிரதேச மாநில தேர்தலில் லிபரல் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

முன்னர் 7 ஆசனங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்திருந்த லிபரல் கட்சி இம்முறை 16 ஆசனங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதாகவும், தொழிலாளர் கட்சி 14 ஆசனங்களில் இருந்து 5 இடங்களுக்குச் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுயேச்சை எம்.பி.க்களான ரொபின் லாம்ப்லி மற்றும் யிங்கியா குயுலா ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த ஆண்டு புதிய மாநில நாடாளுமன்ற உறுப்பினராக ஜஸ்டின் டேவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வடமாகாணத்தில் ஆட்சி செய்த தொழிற்கட்சி அரசாங்கம் எட்டு வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

தொழிற்கட்சியின் முதலமைச்சர் ஈவா லோலர் தனது பதவியை வென்றதுடன் முதலமைச்சர் பதவியையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது கட்சியின் தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர், மாநில மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தான் நம்புவதாகவும், லிபரல் கட்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

லியா ஃபினோச்சியாரோ வடமாகாணத்தின் 14வது முதலமைச்சராகவும், அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் லிபரல் கட்சி உறுப்பினராகவும் இருப்பார்.

Latest news

ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை – உயிரிழந்த ஆஸ்திரேலிய பயணி

ஆஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு Arnhem Landல் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர்...

உண்மையான யானையைப் போலவே செயல்படும் அதிநவீன ரோபோ யானை

விலங்குகள் உண்மையில் நகரும் விதத்தைப் பிரதிபலிக்கும் புதிய 3D அச்சிடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள EPFL இன் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, வியக்கத்தக்க...

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து "கேப்டனின் தற்கொலை" காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத...

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கி பாகங்களுடன் ஒருவர் கைது

கறுப்புச் சந்தையில் டஜன் கணக்கான கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான...

சிட்னி ஷாப்பிங் சென்டரில் ஆயுதமேந்தி வந்த இருவர் – ஆயுதங்கள் பறிமுதல்

சிட்னி ஷாப்பிங் சென்டரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகல் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு பரபரப்பான...