News10 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய MH-370 விமானம் மாயமான மர்மம்

10 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய MH-370 விமானம் மாயமான மர்மம்

-

மலேசியா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் MH-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து சீனா நோக்கி பயணித்தபோது காணாமல் போனது.

227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்த நிலையில் விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 7ஆவது வளைவுக்கு அருகில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. இதனால் 2017இல் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே நடந்த தேடுதல் பணியின்போது, ஆபிரிக்க கடற்கரைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் தீவுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் பல துண்டுகள் MH-370 விமானத்தின் துண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால், விமானத்தின் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மாயமான விமானம் குறித்த மர்மம் நீடித்தது.

MH-370 விமானம் காணாமல் போய் 10 ஆண்டுகளை கடந்த நிலையில், விமானம் விழுந்து மூழ்கிய சரியான இடத்தை கண்டுபிடித்ததாக அவுஸ்திரேலிய விஞ்ஞானி வின்சென்ட் லைன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன் “அறிவியலால் MH-370 மர்மம் விலகியது” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்தியப் பெருங்கடலில் 6,000 மீற்றர் (சுமார் 20,000 அடி) ஆழமான பள்ளத்தில் (புரோக்கன் ரிட்ஜ்) விமானத்தை விழச்செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தனது ஆய்வு தொடர்பான அறிக்கையையும் விளக்கப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வின்சென்ட் லைன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விமானத்திலிருந்து பெறப்பட்ட கடைசி இரண்டு தகவல் தொடர்புகள், கட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு நோக்கிய அவசர தரையிறக்கத்தை குறிப்பிடுகின்றன. இதை ஜர்னல் ஒவ் நேவிகேஷன் (JN)ஏற்றுக்கொண்டது.

இந்திய பெருங்கடலின் 7ஆவது வளைவில் வந்தபோது எரிபொருள் தீர்ந்து, அதிவேகமாக தலைகீழாக வந்ததால் விமானம் விழுந்திருப்பதாக முதலில் கூறப்பட்ட கதையை, ஒரு தலைசிறந்த பைலட்டால் விபத்து நடந்திருப்பதாக, இந்த ஆய்வு மாற்றியுள்ளது.

உண்மையில், விமானத்தின் வலது இறக்கை அலையில் மோதாமல் இருந்திருந்து, இன்மார்சாட்டின் வழக்கமான விசாரணை செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் கண்டுபிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் அந்த கதை வேலை செய்திருக்கும். இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, இது நேவிகேஷன் இதழிலும் அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய ஆய்வின்போது, விமானத்தின் இறக்கைகள், மடல் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதமும், இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பறவையால் தாக்கப்பட்ட யுஎஸ் ஏர்வேஸ் விமானத்தை கெப்டன் சுல்லி, ஹட்சன் ஆற்றில் தரையிறக்கியபோது ஏற்பட்ட சேதமும் ஒரே மாதிரியாக இருந்தன.

இது, கடலில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் பாகங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் தலைமை கனடா விமான விபத்து ஆய்வாளர் லாரி வான்ஸ் தெரிவித்த கருத்தை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்கிறது.

கடலில் விழுந்தபோது விமானத்தில் எரிபொருள் இருந்தது, அதன் என்ஜின்கள் இயங்கிக்கொண்டிருந்தன என்றும், அது ஒரு தலைசிறந்த கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கம் என்றும், எரிபொருள் தீர்ந்ததால் விபத்து நடக்கவில்லை என்றும் லாரி வான்ஸ் கூறியிருந்தார்.

விமானம் விழுந்திருக்கும் இடமானது, மிகவும் கரடுமுரடான மற்றும் ஆபத்தான கடல் சூழலுக்குள் உடைந்த ரிட்ஜின் கிழக்கு முனையில் மிக ஆழமான 6000m துளையை கொண்டுள்ளது. குறுகிய செங்குத்தான பக்கங்கள், பெரிய முகடுகள் மற்றும் வேறு சில ஆழமான துளைகளாலும் சூழப்பட்ட நிலையில், அது நுண்ணிய வண்டல் மணலால் நிரம்பியுள்ளது. இதில் விமானம் விழுந்தால் கண்டுபிடிப்பது கடினம். எனவே, அந்த பகுதியை சரிபார்க்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

விமானம் தேடப்படுமா இல்லையா? என்பது அதிகாரிகள் மற்றும் தேடும் நிறுவனங்களைப் பொறுத்தது. ஆனால், அறிவியலைப் பொறுத்த வரையில், MH-370 விமானம் எங்குள்ளது என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் MH-370 விமானம் காணாமல் போனதிலுள்ள மர்மத்துக்கு விரிவான விடை காணப்பட்டுள்ளது. – இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி வின்சென்ட் லைன் வெளியிட்ட இந்த தகவலுக்கு பதிலளித்த ஒரு பயனர், “அப்படியென்றால் திரில்லுக்காக விமானி இதை செய்தாரா?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...