Breaking Newsமெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

-

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

23 வயதான மனோ யோகலிங்கம் மெல்பேர்ன் நோபல் பார்க் பகுதியில் நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் விக்டோரியா பொலிஸார் மற்றும் அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த இளைஞனை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மனோ யோகலிங்கம் 2013 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து சுமார் 11 வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் இருப்பதாக மனோ யோகலிங்கத்தின் நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் அகதியின் மரணத்திற்கு அகதிகள் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்ஜிங் விசாவில் மனோ யோகலிங்கம் செலவழித்த நேரமே அவரது மரணத்திற்குக் காரணம் என நம்புவதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய முறைமையின் கீழ் இந்த இலங்கை இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேன்முறையீடு செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இந்த தற்கொலையை காணமுடியும் எனவும் சபையின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திணைக்களம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த இளைஞனின் நண்பர்கள், உள்துறை அமைச்சகத்தின் டாக்லாண்ட்ஸ் அலுவலகத்திற்கு வெளியே அவரது மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூடினர்.

பிரிட்ஜிங் விசாவில் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் மனோ யோகலிங்கம் போன்றவர்களுக்கு பிரிட்ஜிங் விசாவில் நிரந்தர அனுமதி கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கு கூடியிருந்த பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...