Breaking Newsமெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

-

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

23 வயதான மனோ யோகலிங்கம் மெல்பேர்ன் நோபல் பார்க் பகுதியில் நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் விக்டோரியா பொலிஸார் மற்றும் அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த இளைஞனை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மனோ யோகலிங்கம் 2013 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து சுமார் 11 வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் இருப்பதாக மனோ யோகலிங்கத்தின் நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் அகதியின் மரணத்திற்கு அகதிகள் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்ஜிங் விசாவில் மனோ யோகலிங்கம் செலவழித்த நேரமே அவரது மரணத்திற்குக் காரணம் என நம்புவதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய முறைமையின் கீழ் இந்த இலங்கை இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேன்முறையீடு செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இந்த தற்கொலையை காணமுடியும் எனவும் சபையின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திணைக்களம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த இளைஞனின் நண்பர்கள், உள்துறை அமைச்சகத்தின் டாக்லாண்ட்ஸ் அலுவலகத்திற்கு வெளியே அவரது மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூடினர்.

பிரிட்ஜிங் விசாவில் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் மனோ யோகலிங்கம் போன்றவர்களுக்கு பிரிட்ஜிங் விசாவில் நிரந்தர அனுமதி கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கு கூடியிருந்த பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...