Melbourneமெல்போர்ன் Love Machine மோதலில் 6 பேர் கைது

மெல்போர்ன் Love Machine மோதலில் 6 பேர் கைது

-

மெல்போர்னில் உள்ள லவ் மெஷின் இரவு விடுதிக்கு அருகில் இளைஞரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் இரவு விடுதிக்குள் ஆரம்பமான மோதல் வெளியிலும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு 18 வயது இளைஞன் பலத்த காயம் அடைந்து மூன்று அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக கரோலின் ஸ்பிரிங்ஸ், டோனிபுரூக் மற்றும் மெல்போர்ன் சவுத் ஆகிய இடங்களில் உள்ள பல வீடுகளில் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதோடு, கத்திக்குத்துச் சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், கைத்தொலைபேசிகள் மற்றும் சில இலத்திரனியல் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

18, 19, 21, 24 மற்றும் 25 வயதுடைய 5 பேர் நவம்பர் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...